/* */

ரோட்டரி சங்கம் சார்பில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ரோட்டரி சங்கம் சார்பில், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணிக்கு இராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ரோட்டரி சங்கம் சார்பில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும், உடல் நலம் குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு இராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரோட்டரி மாவட்டம் 2982, பப்ளிக் இமேஜ் திட்டத்தின் சார்பில், தனி மனித உடல் நலமே தேசத்தின் நலன் என்ற தலைப்பிலான உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2,500 கி.மீ மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பேரணி நடைபெற்று வருகிறது.

கடந்த 19ஆம் தேதி ஏற்காட்டில் துவக்கி வைக்கப்பட்ட இந்த பேரணி ராசிபுரம் வந்தடைந்தது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த பேரணிக்கு, ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ரோட்டரி கவர்னர் சுந்தரலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தார்.

இந்த பேரணி ராசிபுரத்தில் புறப்பட்டு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், பாண்டிச்சேரி திண்டிவனம் சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓமலூர், சேலம், சங்ககிரி, கோபி, கோவை, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்றடைந்து மீண்டும் சேலம் வந்தடையும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் சேர்மன் பாலாஜி, மாவட்ட ரோட்டரி கவர்னர் (தேர்வு) சரவணன், முன்னாள் துணை கவர்னர் வள்ளுவன், ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன், திட்ட சேர்மேன் சிவகுமார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Updated On: 23 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’