/* */

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, ராசிபுரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து ராசிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அர்பன் பேங்க் துணைத் தலைவர் வெங்கடாசலம்,கோபால், நகர இளைஞரணி செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், பட்டு சொசைட்டி துணைத் தலைவர் கந்தசாமி, ஐடி விங் செயலாளர் ஹரிராகவேந்திரன், கண்ணையா செல்வம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 7 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!