/* */

இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து  தவறி விழுந்து பெண் பலி
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே உள்ள அத்திப்பலகானூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி மாலதி (45). சம்பவத்தன்று காலை ஜெயராமன், அத்திப்பலகானூரில் இருந்து, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பப்பட்டிக்கு கருங்கற்களை ஏற்றிக் கொண்டு டிராக்டரை ஓட்டிச் சென்றார். டிராக்டரில் அவருடைய மனைவி மாலதியும் அமர்ந்து சென்றார். பின்னர் கருங்கற்களை தொப்பம்பட்டி பகுதியில் இறக்கி விட்டு இராசிபுரம் நோக்கி திரும்பி வந்தனர்.

நாமகிரிப்பேட்டை அருகே வேலம்பாளையம் அருகே வந்தபோது, வேகத்தடை மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதனால் நிலை தடுமாறிய மாலதி, கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிசிச்சைக்காக இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாலதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு