/* */

வாகன திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது
X

ராசிபுரத்தில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் பிடிபட்டவர்கள் ஆத்தூரை அடுத்த சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்குமார்(45), பரமத்தி வேலூரை சேர்ந்த பூபாலன்(22) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் கங்கவள்ளியை சேர்ந்த தனபால் (23) மற்றும் கோபிநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில், இருந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Feb 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  3. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  4. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!