/* */

பரமத்திவேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்திவேலூர் அருகே டூ இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
X

பைல்படம்.

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மீது டூ வீலர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, ஓலப்பாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி தனது டூ வீலரில், ஜேடர்பாளையம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திருபிக் கொண்டிருந்தார். அப்போது கொளக்காட்டுப்புதூர் அருகே வந்தபோது ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் மீது, சசிகுமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த சசிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்