/* */

சமையல் செய்யும்போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழப்பு

பரமத்தி அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்ததால் பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சமையல் செய்யும்போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள சானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாளி. இவருடைய மனைவி ராமாயி ( 75), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அடுப்பில் இருந்த விறகு வெடித்து அதில் இருந்து தீப்பொறி பறந்து ராமாயி அணிந்திருந்த சேலையில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியதால் ராமாயி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை நாமக்கல் அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ராமாயி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!