/* */

ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு

பரமத்திவேலூரில் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையணை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு
X

பைல் படம்

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (39). இவர் தலையணை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிவக்குமார் தலையணைகளை விற்பனை செய்ய கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர் காவிரி புதிய பாலத்தில் சென்றுகொ ண்டிருந்தபோது, அவரது டூ வீலர் நிலைத்தடுமாறி ரோட்ரோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்ததில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி