/* */

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலையில், மலை மீது பிரசித்திப்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி சாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கோயில் நிர்வாக பணியாளர்கள், சிவாச்சாரியார்களைக் கொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். திருக்கோயிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடவும் அனுமதி இல்லை.

வரும் 18-ஆம் தேதி தைப்பூச திருநாளன்றும் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கும் அனுமதி இல்லை, சாமி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு சிறிய மரத்தேரில் (சப்பரம்) சுவாமி அலங்கரித்து கோயில் நிர்வாக பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சாமி திருவீதி வலம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், முருக பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Updated On: 15 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்