பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரயில்வே இன்ஜினியர் சாவு

பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரயில்வே இன்ஜினியர் சாவு
X

பைல் படம்.

பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், டூ வீலரில் சென்ற ரயில்வே இன்ஜினியர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள மயிலபுரத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (43). இவர் சேலத்தில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு, ஜோதிபாசு தனது சொந்த ஊரான மயிலபுரத்திற்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் சேலம் திரும்பி வந்தார்.

கரூர்- சேலம் பைபாஸ் ரோட்டில், பரமத்தி ஓவியம்பாளையம் அருகில் உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் அவர் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜோதிபாசுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த ஜோதிபாசு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஜோதிபாசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business