/* */

பரமத்தியில் கார் மோதி டூ வீலரில் சென்ற விவசாயி பலி

பரமத்தி அருகே, இரு கார் மோதியதால் டூ வீலரில் சென்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

பரமத்தியில் கார் மோதி டூ வீலரில் சென்ற விவசாயி பலி
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (60) விவசாயி. சம்பவத்தன்று காலை, இவர் தனது டூ வீலரில், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்திற்கு சென்றார். அவர் கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, காங்கேயத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வேகமாகச் சென்ற கார் பழனியப்பன் மீது மோதியது. இந்த விபத்தில், பலத்த படுகாயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காங்கயம், பங்களாபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...