/* */

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் தேர்த்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பரமத்திவேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவில் அம்மன் தினசரி சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து, தேர் இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேரோடம் நடைபெற்று நிலை வந்தடைந்தது. நாளை புதன்கிழமை பொங்கல், மா விளக்கு பூஜை மற்றும் வியாழக்கிழமை கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடைபெறும். 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Updated On: 24 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...