/* */

ஜேடர்பாளையம் அருகில் காவிரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகில் காவிரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகில் காவிரியில்  மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளி அருகே, காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையான்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்த மதலைமுத்து மகன் பெனிட்டோ போஸ்கோ (26) என்பதும், அவர் ஜேடர்பாளையத்துக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Aug 2022 8:13 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...