/* */

பரமத்திவேலூரில் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல், 3 பேர் கைது

பரமத்திவேலூரில் டேங்கர் லாரியில் கடத்திய 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல், 3 பேர் கைது
X

பரமத்திவேலூர் அருகே 12,00 லிட்டர் கலப்பட டீசல் கடத்திய டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், பரமத்திவேலூர் பகுதியில், வீரணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதிகாலை 3 மணிக்கு அவ்வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், எவ்வித ஆவணமோ, லைசென்சோ இல்லாமல், சட்ட விரோதமாக, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக பயோ டீசல் என்ற பெயரில் 12,00 லிட்டர் கலப்பட டீசலை டேங்கரில் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, லாரி டிரைவர் ஜெயசீலன், கிளீனர் குபேந்திரபாண்டியன், குப்புசாமி (எ) குணசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவான கலப்பட டீசல் விற்பனையாளர், சென்னையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  3. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  4. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  6. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  10. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது