/* */

பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவு; விவசாயிகள் கவலை

பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவடைந்ததால் சாகுடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவு;  விவசாயிகள் கவலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், ஜேடர்பாளையம் மற்றும் கரூர் மாவட்டத்தின் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் தினசரி பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த பூக்களை பரமத்தி, வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 80-க்கும், அரளி ரூ. 120-க்கும், ரோஜா ரூ. 160-க்கும், முல்லை ரூ. 300க்கும், செவ்வந்தி ரூ. 140க்கும் ஏலம் போனது.

தற்போது, கோயில் விழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் அதிகம் இல்லாததால், பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை சரிவால் மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 3 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?