ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம்

ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் நடைபெற்றது.
ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்கிச் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு கோயில் பட்டாச்சார்யார்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றினர்.
தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பின்னர்சுவாமிக்கு தங்ககவசசிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா லாக் டவுன் என்பதால் கோயில் மூடப்பட்டிருந்து. இதனால் பக்தர்கள் வெளியிலிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu