/* */

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை

பொத்தனூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் கார் நிறுத்துவது தொடர்பாக, மணிகண்டனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ரவி, குமார் ஆகியோருடன் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவு, அவருக்கும் ரமேஷ், ரவி, குமார் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மூவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை, நீண்ட நேரம் ஆகியும், மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  2. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  3. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  6. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  7. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  10. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...