மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட தாய்: மகன் விஷம் குடித்து தற்கொலை

மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட தாய்: மகன் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

கபிலர்மலை அருகே மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் கவின் (21). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

கவின் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை தாய் சாந்தி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கவின், சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு மயக்கமானார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சாந்தி, மகனை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கவின் உயிரிழந்தார்.

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business