பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா
X

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பாலாபிஷேக விழா நடைபெறும். இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்கள் மற்றும் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பால் மற்றும் புனித தீர்த்தங்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai marketing future