Begin typing your search above and press return to search.
ஜேடர்பாளையம்: குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ஜேடர்பாளையம் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பாபு (வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி சின்னமருதூரில், ரோட்டோரம் இருந்த ஒரு பாலத்தில் மது குடித்து விட்டு அமர்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, பாபு நேற்று இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.