/* */

ஜேடர்பாளையம்: குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம்: குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பாபு (வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி சின்னமருதூரில், ரோட்டோரம் இருந்த ஒரு பாலத்தில் மது குடித்து விட்டு அமர்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, பாபு நேற்று இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி