இருக்கூரில் கஞ்சா விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரர் கைது

இருக்கூரில் கஞ்சா விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரர் கைது

பைல் படம்.

இருக்கூரில் கஞ்சா விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பெட்டனா பகுதியை சேர்ந்தவர் கமல். இவருடைய மகன் அக்பர் உசேன் (34). இவர் கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் தங்கி சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி, போலீசார் இருக்கூர் சென்று, அக்பர் உசேனின் மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, மளிகைக் கடையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த அரை கிலோ எடையுள்ள கஞ்சவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது சம்மந்தமாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story