/* */

கோரைப்பாய் கிடங்கில் கொள்ளையடிக்க வந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது

கோரைப்பாய் கிடங்கில், கொள்ளை அடிக்க வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து, கார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோரைப்பாய் கிடங்கில் கொள்ளையடிக்க வந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது
X

பைல் படம்.

பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி ராஜாரணவீரன், பரமத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்ஐக்கள் கோவிந்தராஜ், யுவராஜ், மோகன் மற்றும் போலீசார், பரமத்தியிலிருந்து பில்லூர் செல்லும் ரோட்டில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைவான இடத்தில், ஒரு கார், 2 டூ வீலர்களில் சந்தேகப்படும்படிசிலர் நிற்பதை கவனித்தனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இருவரை பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட இருவரும் மதுரை மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் திருப்பதி (19), கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கோபிநாத் (23) என்பதும், அவர்கள் பரமத்தி அருகே உள்ள, கோரைப் பாய்க் கிடங்கில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த தகவலின்பேரில் குற்றவாளிகளுக்கு உதவி செய்த பரமத்தி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மகேந்திரன் மகன் ஸ்டீபன் ராஜ் (21), சச்சிதானந்தம் மகன் ஹேமந்த் குமார் (21), விஸ்வலிங்கம் மகன் விஜயகுமார் (32) ஆகிய 3 பேர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 டூ வீலர்கள், அரிவாள், கத்தி, சுத்தியல் உள்ளிட் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...