/* */

பூனை மீட்க கிணற்றில் குதித்த விவசாயி: இரு உயிர்களும் பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க கிணற்றில் குதித்த விவசாயியை தீயைணப்பு படையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

பூனை மீட்க கிணற்றில் குதித்த விவசாயி: இரு  உயிர்களும் பத்திரமாக மீட்பு
X

சித்தரிப்பு படம் 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள தெற்கு நல்லியாம்பாளை யத்தை சேர்ந்தவர் லோகநாதன் (42). விவசாயி. இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த பூனை சம்பவத்தன்று இரவு விவசாயி வீட்டின் அருகே இருந்த, கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.

இதனை பார்த்த லோகநாதன், பூனையை மீட்க கிணற்றில் குதித்தார். பூனையை காப்பாற்றிய அவரால் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் பூனையுடன் அவர் 20 அடி ஆழத்தில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து, அங்கிருந்தவர்கள் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி பூனை மற்றும் லோகநாதனை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 9 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  6. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  7. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  9. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  10. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...