Begin typing your search above and press return to search.
மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை
மோகனூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
மோகனூர் அருகே உள்ள, பூண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லுசாமி (32), விவசாயி. இவருக்கும் ஹரிணி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நல்லுசாமி, மனைவியை அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு 2 நாட்கள் கழித்து வந்து அழைத்து செல்வதாக கூறிச் சென்றார்.
சம்பவத்தன்று, வீட்டில் தனியார் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஹரிணி மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்று நல்லுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் எஸ்எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.