/* */

ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்

பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்
X

சித்தரிப்புக்காட்சி

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி ஆபாஷ்குமார், மண்டல எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில், கோவை உட்கோட்ட டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில். சேலம் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாமக்கல் எஸ்ஐ அகிலன், எஸ்எஸ்ஐ சத்தியபிரபு மற்றும் பறக்கும் படை தனித்துணை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ப.வேலூர் அருகில் உள்ள தேவனம்பாளையம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எவ்வித லைசென்ஸ் மற்றும் ஆவணம் இல்லாமல், சட்டவிரோதமாக 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பயோ டீசல் என்ற பெயரில் போலி டீசலை விற்பனைக்கு கொண்டு சென்ற லாரியையும், 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்பட டீசலை கடத்திய லாரி உரிமையாளர் திருச்செங்கோட்டை சேர்ந்த மதிவாணன் (62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்