பரமத்தி அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பரமத்தி அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

பரமத்தி அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரவீன் (22), ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிரவீன் வீட்டிலிருந்தார்.

சம்பவத்தன்று காலை பிரவீனின் பெற்றோர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டில் இருந்த மின் விசிறியில் பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கியூவில், பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business