பொத்தனூர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்.
Removal Of Encroachment - நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில், பொத்தனூர் பகுதியில் ரோட்டின் இருபக்கமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, பழக்கடைகள், பெட்டிக்கடைகள், துணிக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்ள ஏராளமான கடைகள் வைத்துள்ளனர். பல இடங்களில் விளம்பர போர்டுகளும் அமைத்துள்ளனர். மெயின்ரோடு பகுதியில் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். அதிகாரிகள் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில், பொத்தனூர் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை போலீசாரின் உதவியுடன் அகற்றினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu