/* */

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: பரமத்தி அருகே தரைப்பாலம் ஆய்வு

தொடர்மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, பரமத்தி அருகே உள்ள பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி:  பரமத்தி அருகே தரைப்பாலம் ஆய்வு
X

பரமத்தி அருகே தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்வதை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்கிறது. இதையொட்டி அப்பகுதியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைப்புகளைச் சரி செய்து, தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். செருக்கலையில் ஆரம்பித்து இடும்பன்குளம் வரை ராமதேவம் பஞ்சாயத்து வழியாக திருமணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, தண்ணீர் பாலத்தின் மேல் செல்லாமல் இருக்க நீர்வரத்து செல்லும் வழியில் உள்ள அடைப்புகளைச் சரி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பரமத்தி தாசில்தார் அப்பன்ராஜ், பரமத்தி பிடிஓ., அசோகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!