/* */

மத்திய அரசைக் கண்டித்து ப.வேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசைக் கண்டித்து ப.வேலூரில் திமுகவினர்   ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் அண்ணா படிப்பகம் அருகே திமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர திமுக பிரமுகர் கண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மாரப்பன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்கரவர்த்தி, நகர துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்