/* */

பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்

பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்; சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (45), விவசாயி. இவர் அர்த்தனாரிபாளையத்தில் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாடு கத்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த பசு மாடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் காணாமல் போன பசு மாட்டை தேடியபோது, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் ரோட்டில் பசு மாட்டை இருவர் சரக்கு ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் சரக்கு ஆட்டோவில் மாடுகளை ஏற்றி கொண்டு இருந்தவர்களை பிடித்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில். அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பூங்குளத்துபாளையத்தை சேர்ந்த சதீஷ் (எ) சேகர் (45), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாடு திருடிய இருவரையும் கைது செய்தது, மாடு திருட பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...