/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 216 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி  வெளியே சுற்றிய 216 வாகனங்கள் பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் டூ வீலர்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 216 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் சீன கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், லாக் டவுன் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றிய 214 பேரின் டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதேபோல் ஒரு டிராவல்ஸ் வேனும், சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 534 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 26 May 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?