/* */

திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு

பரமத்தி அருகே திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே திருமணி முத்தாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடும்பன்குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை,  மாவட்ட கலெக்டர் ஸ்யோசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், காந்திநகர் இடும்பன்குளம் பகுதியில் உள்ள 12 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த 34 பேர், பரமத்தியில் உள்ள டவுன் பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், முகாமிற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இடும்பன்குளம், மறவாபாளையம் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருமணிமுத்தாறு ஆற்றின் வழியில் பிள்ளைகளத்தூர், பில்லூர், கூடச்சேரி, ராமதேவம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலங்களை பார்வையிட்டு, தடையின்றி தண்ணீர் செல்வதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ராமதேவம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில் தண்ணீர் கடந்து செல்வதை பார்வையிட்டு, தண்ணீர் அதிகமாக செல்லும்போது, போக்குவரத்தை தடைசெய்து மாற்று வழியில் திருப்பி அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். செருக்கலை ஏரியில் நீர் நிரம்பி பாதுகாப்பாக வெளியேறி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், பிடிஓ அசோகன் உள்ளிட்டஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 2:15 AM GMT

Related News