/* */

ப.வேலூர் பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

பரமத்திவேலூர் பகுதி அரசு பள்ளிகளில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ப.வேலூர் பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

ப.வேலூர் தாலுக்கா, குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயாசிங், மாணவர்களின் கல்வித்தரத்தை பரிசோதனை செய்தார்.

பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒழுகூர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் நடத்தும் பாட விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் வகுப்பாசிரியர்கள் நேரில் சென்று பேசினார்களா என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் கல்வித்தரத்தை மாவட்ட கலெக்டர் பரிசோதித்தார்.

மாணவ, மாணவிகள் தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், அப்போதுதான், இலக்கை அடைய முடியும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, பள்ளிகளில் குடிநீர் வசதி, வகுப்பறை கட்டடங்கள் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்