/* */

பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூரில், தேங்காய் விலை உயர்வால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
X

பரமத்திவேலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. பரமத்தி, வேலூர், பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.24-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.25.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.55 ஆயிரத்து 778 மதிப்பிலான தேங்காய்கள் விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம், ஏலத்திற்கு 3 ஆயிரத்து 512 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.50-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.92 ஆயிரத்து 157 மதிப்பிலான தேங்காய் விற்பனை நடைபெற்றது. தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?