/* */

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

HIGHLIGHTS

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்
X

பைல் படம் 

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

கபிலர்மலை அருகே கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் மட்டைகளை உரித்து மஞ்சு நார் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பவத்தன்று, வேலை முடிந்தவுடன் வழக்கம் போல் மில்லை பூட்டி விட்டு சென்று விட்டனர். அடுத்த நாள் காலை மில்லில் தேங்காய் நார் குடோன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நார் குடோனில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும்‌ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் மஞ்சு நார் தீயில் எரிந்து நாசமானது.

Updated On: 7 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...