பரமத்திவேலூர் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில்  தேங்காய் ஏலம்
X
பரமத்திவேலூர் ஒழங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3,094 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ25-க்கும், சராசரியாக ரூ.28-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.89,957 மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 380 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ22-க்கும், சராசரியாக ரூ.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,27,126 மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story
நாமக்கல் சாம்பியன்ஸ்! மாநில கராத்தே போட்டியில் அதிரடி வெற்றி