/* */

பரமத்திவேலூர் அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி

பரமத்தி வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் டூ வீலரில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள தொட்டியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (75) விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது டூ வீலரில், கந்தம்பாளையத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். முசல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று ராதாகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...