மோகனூர் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள, வாழவந்தி துணை மின்நிலையத்தில் நாளை 11ம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தபம் செய்யப்படுகிறது.
இதனால், மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலைப் பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையார், ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்று செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu