கபிலர்மலைப் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கபிலர்மலைப் பகுதியில் நாளை 29ம் தேதி புதன்கிழமை மின் நிறுத்தம் ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளதாவது:

பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில், பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை 29ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால் கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture