/* */

பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து

Fire Accident -பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.3 லட்சம் சேதமானது.

HIGHLIGHTS

பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து
X

தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட  தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

Fire Accident -நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ராசப்பன் (50). இவர் அப்பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்பட்ட தேங்காய் நார்களை கொட்டி வைத்திருந்த இடத்தின் வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தேங்காய் நார் குவியல் மீது விழுந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சரவணன் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நாரில் பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 10:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...