JKKN மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்கு நடைபெற்றது

மருந்தியல் துறையில் AI கருவிகளின் பாதை விவரங்கள் அறிய பெருமளவு பயிலரங்கில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்கள்


நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் உள்ள JKKN கல்வி நிறுவனத்தின், JKKN மருந்தியல் கல்லூரியில் மார்ச் 15, 2025 அன்று "செயற்கை நுண்ணறிவுடன் ஆராய்ச்சியில் புதுமை: நவீன AI கருவிகளுடன் சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி கட்டுரையை திறம்பட உருவாக்குவதற்கான விரிவான பயிலரங்கு" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான பயிலரங்கை நடத்தியது.

இந்த பயிலரங்கு மருந்தியல் நடைமுறை துறை மற்றும் மருந்தியல் துறை இணைந்து, தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கிய பேச்சாளர்களாக, டாக்டர் பாலகுமார் பிச்சை (பெரியார் மணியம்மை அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம்) மற்றும் டாக்டர் செந்தில்குமார் பழனியப்பன் (கற்பகம் உயர்கல்வி அகாடமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் அமர்வில் ஆராய்ச்சியில் புள்ளியியலின் முக்கியத்துவமும், இரண்டாவது அமர்வில் மருந்தியல் அறிவியலில் செயற்கை நுண்ணறிவின் பங்கும் விவாதிக்கப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு ஆராய்ச்சி முறையில் AI கருவிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் ஆராய்ச்சி கட்டுரைகளைத் தயாரிப்பதற்கான நுட்பங்கள் குறித்த அறிவுரை வழங்கப்பட்டது.

Tags

Next Story