/* */

நாமக்கல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). இவருடைய மனைவி அழகுமணி. இவர்கள் இருவரும் எருமப்பட்டி அருகே வரகூர் கோம்பையில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். முருகேசனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ள முருகேசன் சம்பவத்தன்று மது குடித்ததாக தெரிகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். மயங்கிக் கிடந்த முருகேசனை அக்கம் பக்கதினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க