நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., தற்காலிக மார்க் ஷீட் வழங்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு    டி.சி., தற்காலிக மார்க் ஷீட் வழங்கும் பணி துவக்கம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, டி.சி. மற்றம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கி உள்ளது.

நாமக்கல்,

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த 8ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர் உயர் கல்விக்கான சேர்க்கை பெறுவதற்கு வசதியாக, பள்ளி மாற்று சான்றிதழ் (டி.சி.,) மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோடு செய்து வழங்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததது. அதையடுத்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தேர்வு முடிவு வெளியான மறுநாளில் இருந்து, மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி கடந்த, 9 முதல் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன், சான்றிதழ் கேட்டு வந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி டி.சி., சான்றிதழ் வழங்கி வருகிறார். மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கலைச்செல்வி, மாணவியருக்கு, டி.சி., மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இப்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது வருகிறது.

Next Story
Similar Posts
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் திடீர் பவர் கட்: செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்ட முதிர்வுத் தொகை    பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற  டிரினிடி கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை :    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்
வைகாசி மாத முகூர்த்த சீசனை முன்னிட்டு,  நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில்  ரூ. 26.18 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு    டி.சி., தற்காலிக மார்க் ஷீட் வழங்கும் பணி துவக்கம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய    காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
புதுச்சத்திரம் பகுதியில் நீட்டிக்கப்பட்ட    டவுன் பஸ் வசதி : எம்.பி. துவக்கம்
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்
முடி மாற்று அறுவை சிகிச்சையில் இரட்டை மரணம்! பல் மருத்துவரால் நடந்த பரிதாபம் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தேவைப்படுவோர்    நாமக்கல் மாநகாட்சியை தொடர்புகொள்ளலாம்
நீட் முடிவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! NEET முடிவுகள் தடைசெய்யப்பட்டது ஏன்? முழு விவரம் இதோ!
சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது : NEET தேர்வு முடிவுகளுக்கு தடை
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்