/* */

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி  ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு  விலை உயர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.1,000 விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் சில வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கை கொள்முதல் செய்கின்றனர்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் ரூ.17 ஆயிரத்துக்கு விலை போனது. தற்போது ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 11 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!