நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், பெரியார் பிறந்த நாளான செப். 17-ந் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை ஏற்று உறுதிமொழியை வாசித்தார். அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் (கணக்கு) நந்தகுமார், பிஆர்ஓ சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu