/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், பெரியார் பிறந்த நாளான செப். 17-ந் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை ஏற்று உறுதிமொழியை வாசித்தார். அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் (கணக்கு) நந்தகுமார், பிஆர்ஓ சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!