தனியார் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை : ஹாஸ்டல் வார்டன் குண்டர் சட்டத்தில் கைது

தனியார் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை :    ஹாஸ்டல் வார்டன் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஹாஸ்டல் வார்டன் வினோத்.

நாமக்கல் அருகே 14 வயது மாணவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த, தனியார் பள்ளி ஹாஸ்டல் வார்டன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, 14 வயது மாணவர், நாமக்கல் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அப்பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறார். அந்த ஹாஸ்டல் வார்டனாக, எருமப்பட்டி அடுத்த திப்ரமாதேவியை சேர்ந்த வினோத் (26) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆக. 4ம் தேதி இரவு 11 மணிக்கு, வார்டன் வினோத் 9ம் வகுப்பு மாணவரை தனது அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மீண்டும், கடந்த ஏப்ரல் 3ம் தேதி, இரவு 11 மணிக்கு, அதே மாணவரை தண்டனை எனக்கூறி மீண்டும், தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதையடுத்து, மாணவரின் பெற்றோர்கள், மோகனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கிப் பதிவு செய்து ஹாஸ்டல் வார்டனை கைது செய்து ரிமாண்ட் காவலில், சேலம் மத்திய சிறையில் அடைந்தனர்.

இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஹாஸ்டல் வார்டன் வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மோகனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி ஆகியோர், நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். அவர் இது குறித்து, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து,வினோத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story