நாமக்கல்லில் பொது அமைப்புகளின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி

நாமக்கல்லில் பொது அமைப்புகளின் சார்பில்    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி
X

நாமக்கல்லில் பொது அமைப்புகளின் சார்பில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

நாமக்கல் நகரில் ஆபரேஷன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளில் சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் நகரில் ஆபரேஷன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளில் சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த வெற்றிகரமான நடவடிக்கை பாராட்டியும், ராணுவ வீரர்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாமக்கல்லில் பொது அமைப்புகளின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

நாமக்கல் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நுழைவு வாயிலில் இருந்து இந்த பேரணி துவங்கியது. இந்த பேரணியில், நாமக்கல் மாவட்ட பாஜ தலைவர் சரவணன், மாநில பாஜ விவசாய அணி துணை அமைப்பாளர் சத்தியபானு, நகர பாஜ தலைவர் தினேஷ்குமார், நகர தமாகா தலைவர் சக்திவெங்கடேஷ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் பாலசுப்ரமணியம், வணிகர் சங்க தலைவர் வாசுசீனிவாசன், பசுமை தில்லை சிவகுமார், முன்னாள் ராணுவ வீரர் சீரங்கன், கவிஞர் சிந்தனைப் பேரவை தலைவர் டாக்டர் மோகன் உள்ளிட்ட திரளானவர்கள் கையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். காந்தி சிலை அருகில் பேரணி நிறைவு பெற்றது. அப்போது தாக்குதலின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story