/* */

நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்
X

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், பெரும்பாலான போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகாக்களில் உள்ள வழங்கல் அலுவலகத்தில், ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முகாம் நேற்று துவங்கியுள்ளது.

நாமக்கல் தாலுகா வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமில், முதுநிலை ஆர்.ஐ., பிரகாஷ் தலைமையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைக் கொண்டுவந்து இணைத்துக் கொண்டனர். இப்பணி தொடர்ந்து தினசரி நடைபெறும். பொதுமக்கள் அனைவரும், ஆதாருடன், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொள்ள வேண்டும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 July 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!