நாமக்கல் மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,555 ஆக உயர்ந்துள்ளது. இன்று 221 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 44,090 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 1,037 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 428 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business