/* */

மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது

மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் அருண்குமார் (28). இவருக்கும், எருமப்பட்டி அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அருண்குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நன்செய் இடையாறு பகுதியில் உள்ள ஒரு கோயில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமியுடன் அருண்குமார் மோகனூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தாராம். அப்போது சிறுமியை அருண்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமி திருமணம், கர்ப்பம் அடைந்தது குறித்து அறிந்த சைல்டு லைன் உறுப்பினர்கள் நந்தினி, சுப்ரமணியம், விஏஓ கல்பனா ஆகியோர் இதுகுறித்து, எருமப்பட்டி வட்டார குழந்தை திருமண தடுப்பு விரிவாக்க அலுவலர் செல்வராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை