நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் 15ம் தேதி முதல் ஜமாபந்தி

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் வருகிற 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும். ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் டிஆர்ஓ தலைமையில் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். கொல்லிமலை தாலுகா அலுலகத்தில் நாமக்கல் ஆர்டிஓ தலைமையில் 15ம் தேதி மற்றும் 16ம் தேதி நடைபெறும். சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலால்துறை உதவி கமிஷனர் தலைமையில் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். மோகனூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும். பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் தலைமையில் 15ம் தேதி முதல் 28ம் தேதி நடைபெறும். குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையில் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடைபெறும்.
வருவாய் தீர்வாயம் சனி, ஞாயிறு, திங்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் 21.5.2025 தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலரால், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீதான குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.
எனவே, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu